வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 30, 2009

பதிவுகளின் தொகுப்பு - 2009 டிசம்பர்

இம்மாதம் பதினோராம் திகதி அளவிலேயே நான் எனது பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். ஆயினும் ஒருபதிவுக்கு 100 இல் தொடங்கிய வாசகர் எண்ணிக்கை அவதார் தொடர்பான பதிவுடன், பதிவுக்கு 250 என்ற அளவில் காணப்பட்டது. facebook மற்றும் twitter மூலமான காட்சிப்படுத்தல்கள் இத்தொகைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இம்மாதத்தின் இருபதாவது பதிவாக இப்பதிவு அமைகின்றது. இம்மாதம் எழுதிய பதிவுகளில் பல விடயங்கள் ஏற்கனவே எழுதப்பட்டவை. சிறிய அளவில் மாற்றங்கள் செய்து இடப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதத்தில் இருந்து மாதாந்தம் பத்து தொடக்கம் இருபது பதிவுகள் வரை மேற்கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கின்றேன். விடயப்பரப்புக்களை இன்னும் விரிவாக்க வேண்டும். வழமையான எழுத்தாளர்களின் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்ற பெருவிருப்பு எனக்குண்டு. இலக்கியம் என்ற எல்லைக்குள் எழுதுபவர்களே ஏராளம் பேர் உள்ளார்கள். சிலர் அதைத்தாண்டி சமூகம், தத்துவம் என்ற எல்லை வரை செல்பவர்கள் இன்னும் சிலர். அவற்றையும் தாண்டி அபிவிருத்தி, செயற்பாடு என்ற எல்லைகளை நோக்கி போகவேண்டியது அவசியமானது. இதனைத் தொடர்ச்சியாக வலியுறுத்த விரும்புகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் புனைவுகளை எழுதும் எண்ணம் உண்டு. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் புனைவுக்கும் உண்மைக்கும் இடையிலான ஊடாட்டமாக அமையும் என எதிர்பார்க்கலாம். உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு புனைவுகளைப் போல் சிறந்த ஊடகம் எதுவும் இல்லை என்றே தோன்றுகின்றது. புனைவுகளூடாக நிலைத்துவிட்ட கட்டமைப்புக்களைக் இலகுவாகக் கரைத்துவிட முடியும் என்று தோன்றுகின்றது.

இதுவரையான பதிவுகள்.

முதல் இடுகை என்ற பெயரில் இரண்டு இடுகைகளை இட்டுள்ளேன். முதலாவது ஏற்கனவேயான எனது உரையாடல்கள் தொடர்பானது. அண்ணளவாக 20 மாதங்கள் நான் வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்திய உரையாடல்கள் தொடர்பானது. மற்றையது இவ்வலைத்தளத்திற்கான அறிமுகமாக அமைகின்றது.

முதல் இடுகைக்கு முன் இடுகை
வெட்கத்துடன் வெளிவருதல் - முதல் பதிவு

அடுத்து நூலகம் திட்டம் தொடர்பாக நேத்ரா தொலைக்காட்சி என்னிடம் இரண்டு நேர்காணல்களை நிக்ழ்த்தியிருந்தது. அந்நேர்காணல்களின் எழுத்துவடிவங்களே அடுத்துவரும் இரண்டு பதிவுகளுமாகும்.

நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (06.07.2008)
நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (20.12.2008)

மார்க்சியம் தொடர்பான வாசிப்புக்களை அதிகளவில் மேற்கொண்ட காலப்பகுதியாக 2002 ஆம் ஆண்டைக் குறிப்பிட முடியும். அக்காலப்பகுதிகளில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தீவிரமாக மார்க்சியம் தொடர்பாக வாசித்துக் கொண்டிருந்தேன். மார்க்சியம் எவ்வாறு வேத நூல்களைப் போல பலராலும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன். மார்க்சியம் சார்பானதும் அதன் மீதான விமர்ச்னங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியான வாசிப்பு இருந்தாலும், மே 18 இற்குப் பின்னர் மார்க்சியத்தை உள்வாங்கி இடதுசாரித்துவத்தை நாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றவகையில் எவ்வாறு செழுமைப்படுத்துவது என்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினேன். அதன்வழி வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுத நினைக்கின்றேன். முதல் இரண்டு பகுதிகள் எழுதிய பின்னர் பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விரிவாக எழுதத் தொடங்கியிருக்கின்றேன். அதனால் சிறிய இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது.

இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 1
இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 2

அடுத்து கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஒரு பதிவு. முரளி அவர்கள் தனது கருத்தொன்றிற்காக அரசாங்க வேலையில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பானது.

Dr. முரளியின் பணிநீக்கம்

2007 ஆம் ஆண்டளவில் நானும் துவாரகனும் சிவதாஸ் அவர்களும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தோம். இவ்வுரையாடல் பின்னர் துவாரகனால் நேர்காணலாக்கபட்டு காலம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாலானவை துவாரகனது கேள்விகளே. நானும் சிவதாசும் உரையாடல் தொடர்ந்து செல்வதற்கான ஊக்கியாக இருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 4

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக நூலகம் தொடர்பான கட்டுரை கேட்கப்பட்டிருந்தது. சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் ஆவணப்படுத்தல் ஆகிய வெளிகள் ஊடாடும் வகையில் விரிவான கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். அதைச் சில திருத்தங்களுடன் வலைப்பதிவில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்க முடிந்தது.

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 0
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 1
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 2
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 3
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 4

அடுத்து அண்மையில் வெளிவந்த ஜேம்ஸ் கெமரூனின் அவதார் திரைப்படம் தொடர்பான பதிவுகள். அவதார் தொடர்பான பதிவுகளை மேலும் விரிவாக எழுதிச் சென்றிருக்கலாம் என்று தோன்றுகின்றது. அவதார் தொடர்பான முதலாவது பதிவு அதன் அறிமுகமாக இருந்த போதிலும் இரண்டாவது பதிவு சூழலியல் சார்பான பார்வையையும் மூன்றாவது பதிவு காலனித்துவம் - பின்காலனித்துவம் சார்பான பார்வையையும் முன்வைத்திருக்கின்றது.

அவதார் (Avatar) - 1
அவதார் (Avatar) - 2
அவதார் (Avatar) - 3

No comments:

Post a Comment

Blog Archive

Statcounter